அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இறப்பில் கூட்டணி அரசியல் செய்வதாக திமுக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். மேலும் அவர் (அக்.15) கூறியதாவது, “இறப்பில் கூட்டணி அரசியல் செய்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; இறந்தோரை வைத்து அரசியல் செய்வதை தமிழ்நாடு மக்கள் ஏற்க மாட்டார்கள். வாட்ஸ்-அப் வதந்திகளை மட்டுமே நம்பி வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி” என விமர்சித்துள்ளார்.