ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, ஆட்டு இறைச்சி கிலோ ₹860, கோழி இறைச்சி கிலோ ₹250, நாட்டுக்கோழி கிலோ ₹600 என விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் இறைச்சி கடைகளில் குவிந்து இறைச்சிகளை வாங்கிச் சென்றனர்.