அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இதில் காய்ந்த நிலக்கடலை 295 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குவிண்டாலுக்கு ரூ.10,200 வீதம் மொத்தம் ரூ.8,68,700-க்கு விற்பனை ஆனது. ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, விருதுநகர், ஊட்டி பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.