அந்தியூர் அருகே பிரபதேசம் புதூரில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை மூடக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.