கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு, பொதுசுகாதாரத் துறை பல்வேறு வழிகாட்டுதல் உத்தரவுகளை வழங்கியுள்ளது. குறிப்பாக, தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டம் கூடும் இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணியவும், தொற்று அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து பாதுகாப்பான தொலைவை பராமரிக்கவும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள், பொது இடங்களில் தும்முகிறபோது கைக்குட்டை பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இவை தவிர, பருவகால காய்ச்சல் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்காக தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. அந்த வகையில், சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு மாவட்டத்தில் மாஸ்க் அணிவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் போன்ற பொது இடங்களில் மாஸ்க் அணிவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.