ஈரோடு மாவட்டம், நசியனூரில் குழந்தை இல்லாத மன உளைச்சலால் சாந்தாமணி (27) என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் வேலைக்கு சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த சாந்தாமணி, மாலை கணவர் வீடு திரும்பியபோது தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சித்தோடு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.