ஆசனூரில் தேர் திருவிழா

325பார்த்தது
ஆசனூரில் தேர் திருவிழா
தாளவாடி அருகே ஆசனூரில் உள்ள கும்பேஸ்வரசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர் திருவிழா நேற்று முன்தினம் மாலை அலங்கார பூஜையுடன் தொடங்கியது. நள்ளிரவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மதியம் 3 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் கும்பேஸ்வரசுவாமி எழுந்தருளி வீதி உலா வந்தார். பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனர். மாலை 5 மணியளவில் தேர் கோவிலை வந்தடைந்தது. ஆசனூர், ஒங்கல்வாடி, அரேபாளையம், மாவள்ளம், தேவர்நத்தம், கேர்மாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you