சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்தில், நேற்று அதிகாலை ஒற்றைக் காட்டு யானை கொங்கலி கிராமத்துக்குள் புகுந்து பொதுமக்களை பீதிக்குள்ளாக்கியது. யானையை விரட்ட முயன்றபோது விவசாயி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.