நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அக்.,21 அன்று 102 அடியை எட்டிய நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டது. தற்போது அணை நீர்வரத்து 5,832 கன அடியாகவும், நீர்மட்டம் 102.70 அடியாகவும், நீர் இருப்பு 30.8 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. நீர்வரத்து இதே அளவில் நீடித்தால், அணை விரைவில் அதன் முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.