அதிமுகவில் ஜனநாயகமே இல்லை, அந்தக் கட்சியின் சரிவுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தவெக எந்த குதிரை பேரத்திலும் ஈடுபடவில்லை.
திமுக ஆதரவுடன் முதல்வராக குதிரை பேரத்தில் ஈடுபட்டது யார் என்பது அவர்களுக்கே தெரியும். ஒவ்வொருவரும் பதவியை ராஜினாமா செய்வது அவரவருடைய ஜனநாயக உரிமை. அதிமுக எம்எல்ஏ-க்களை நான் தவெகவுக்கு இழுத்து வருவதாக கூறுவது என் மீதான காழ்ப்புணர்ச்சி மட்டுமே என்றார்.