ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் லேசான சாரல் மழை பெய்தது. மழை நின்ற பிறகு வானில் தோன்றிய வானவில்லை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஏராளமானோர் தங்கள் செல்போன்கள் மூலம் வானவில்லின் அழகிய படங்களை எடுத்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி மகிழ்ந்தனர்.