திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்

75பார்த்தது
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை உள்ளது. 

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும்போது வாகனத்தில் அடிபட்டு இறந்து வந்தன. போக்குவரத்து நெரிசல் இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு '12 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்கள் மற்றும் 16.2 டன்னுக்கு மேல் எடையை ஏற்றி செல்லும் லாரிகள் மற்றும் டிரக்குகளுக்கு திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதி இல்லை, லாரிகளுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மலைப்பாதையில் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. 

இலகுரக வாகனங்கள் இரவு 9 மணி வரை செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது' என்று தீர்ப்பளித்தது. போக்குவரத்து நெரிசல் இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோர்ட்டு உத்தரவை மீறி 20 முதல் 25 டன் எடை வரை உள்ள கனரக வாகனங்கள் காரப்பள்ளம் சோதனைச்சாவடி மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடியை கடந்து திம்பம் மலைப்பாதை வழியாக செல்கின்றன. இதனால் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

இதன் காரணமாக பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி