ஈரோடு: அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வாபஸ் மனு.. இன்று முடிவு

1097பார்த்தது
ஈரோடு: அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வாபஸ் மனு.. இன்று முடிவு
தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதிமுக எம்.எல்.ஏக்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர். எஸ்.பி. வேலுமணி தரப்பு முதல்வர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இபிஎஸ் தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்தது. தற்போது இருதரப்பும் ஒன்றிணைந்துள்ளன. தகுதிநீக்க மனுக்களை வாபஸ் பெறுவதாக அதிமுகவின் இரு அணிகளும் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளன. மனுக்களை ஆராய்ந்து இன்று (மே 28) காலை தனது முடிவை அறிவிப்பதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி