ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தியாளர் அறையில் மாவட்ட ஆட்சியர் எஸ். கந்தசாமி இணையதள வசதியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆர்டிஓ சிந்துஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார், ஏபிஆர்ஓ கலைமாமணி மற்றும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.