ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான சாலைகளில் நடுவே நடப்பட்டுள்ள மின்கம்பங்களில் பகல் நேரங்களில் மின்விளக்குகள் எரிவதால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து பவானி செல்லும் சாலையில் பகல் நேரத்தில் மின்விளக்குகள் எரிவதைக் காண முடிகிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் மட்டும் மின்விளக்குகள் எரிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.