சத்துணவு ஊழியர்கள் 10 வது நாளாக மறியல் போரட்டம்.

0பார்த்தது
ஈரோட்டில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மறியல் போராட்டம் இன்று 10வது நாளாக தொடர்ந்தது. காலியாக உள்ள 60,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியம் ரூ. 6,750 ஆக உயர்த்த வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும், 12 மாத மகப்பேறு விடுப்பு மற்றும் 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும், ஓய்வு வயது 60-லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. "எங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை இந்தப் போராட்டம் ஓயாது" என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் சத்துணவு மையங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி