தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் நகர் தொகுதி கழகம் சார்பில் பகுதி செயலாளர் மனோகரன் தலைமையில் அக்கட்சியினர் ஜெயலலிதாவின் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட கழக செயலாளர் கே.வி. இராமலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.சி. பழனிச்சாமி மற்றும் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.