ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே நாகராஜாபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஈஸ்வரமூர்த்தி (48) மது பழக்கத்திற்கு அடிமையானார். அவரது மனைவி ராதா (37) பலமுறை கண்டித்தும் கேட்காததால், கோபித்துக் கொண்டு ராதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு போலீசார் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையறிந்த கணவர் ஈஸ்வரமூர்த்தியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையால் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.