மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

10பார்த்தது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (02. 03. 2026) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. ச. கந்தசாமி இ. ஆ. ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் இதர அடிப்படைத் தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் மற்றும் குறைகளை கனிவுடன் கேட்டறிந்த ஆட்சியர், அவற்றின் மீது உரிய விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி