தை திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈரோடு ஆலமரப் பகுதியில் பொதுச் செயலாளர் யுவராஜா தலைமையில் அக்கட்சியின் மகளிர் அணியினர் ஒன்று கூடினர். புது பானையில் கோலமிட்டு, புத்தாடை அணிந்து, தை மாதத்தை வரவேற்கும் விதமாக அவர்கள் பொங்கலிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மகளிர் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.