ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகரில் ஒரு வீட்டில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சாகுல் ஹமீது என்பவரை நகர காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 213 கிலோ குட்கா மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு நகர காவல் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.