அதிமுகவில் இருந்து மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கத்திற்குப் பிறகு, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் இன்று (நவம்பர் 10) திறக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட 500 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.