ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கரளவாடி கிராமத்தில் விவசாயி சித்துராஜ் (45) நேற்று இரவு கனமழையால் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்படாத நிலையில் பீஸ் போடுவதற்காக ஏணியில் ஏறியபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.