கோபிசெட்டிபாளையம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, தந்தையின் நண்பரான மணி (50) என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமி தனது பாட்டி உடல்நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்ததால், விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டிற்குச் சென்று கவனித்து வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மணி, சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.