ஈரோடு: மதுபானக் கடை சென்று திரும்பியவர் விபத்தில் பலி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூர் தொட்டியபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன், புதுக்கரைப்புதூர் மதுபான கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.