ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பெரிய அக்ரஹாரம், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு, கிருஷ்ணம்பாளையம், அசோகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்
விஜய் பாலாஜி இன்று நேரில் சென்று வாக்காளர்களைச் சந்தித்தார். பொதுமக்களை எளிதில் கவரும் வகையிலும், அனைவரும் பார்க்கும் வகையிலும் திறந்த வேனில் ஏறி நின்றபடி கூட்டத்தில் கைகூப்பி நன்றி தெரிவித்தார். சில இடங்களில் வேனை விட்டு இறங்கி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நேரடியாக நடந்து சென்றும் தனது நெஞ்சார்ந்த நன்றியினைப் பதிவு செய்தார்.