ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் இன்று (மே 31) மாலை 5 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் புளியம்பட்டி அவிநாசி சாலையில் மரம் முறிந்து
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் சாலை பணியாளர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.