குடும்ப சண்டையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

1பார்த்தது
குடும்ப சண்டையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
ஈரோடு அசோகபுரத்தில், ராஜா என்பவரின் மனைவி சவுந்தர்யா (26) கடன் பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கணவன் ராஜா மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். தெரிந்தவர்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ராஜா குழந்தைகளுடன் கடைக்கு சென்றார். மதியம் சாப்பிட வந்தபோது சவுந்தர்யா தூக்கில் தொங்கிய நிலையில் கண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தர்யா உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி