பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 6 பேர் பலி

2949பார்த்தது
சாத்தூர் பொம்மையாபுரம் அருகே உள்ள சாய்நாத் என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் 4 கட்டிடங்கள் தரைமட்டமான நிலையில், வேறு யாரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. பட்டாசு ஆலையின் மூலப்பொருட்கள் வைக்கும் அறையில் வெடிவிபத்து ஏற்பட்டதாகவும், மீட்புப் பணிகள் முடிந்த பின்னரே விபத்து குறித்த காரணம் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி