இந்தியாவில் திருமணத்தை மீறிய உறவுகள் குறித்த பார்வை மாறியுள்ளது. ஒரு காலத்தில் மன்னிக்க முடியாத தவறாக கருதப்பட்ட இந்த சம்பவம், தற்போது அதிகளவு நடந்து வருவதாக பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, 53% பேர் இது திருமண முறிவாக கருதப்படாது என்றும், 47% பேர் இது திருமண முறிவாக பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றம் சமூகத்தில் உறவுகள் குறித்த பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.