கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதாக தவறான தகவல் பரவி வருவதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநில அரசு தயாரித்து அனுப்பிய அறிக்கையில் தவறு இருப்பதால்தான் மத்திய அரசு விளக்கம் கேட்டதாகவும், திட்டம் நிராகரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், முதலமைச்சர் நேரடியாகப் பிரதமரை சந்தித்து மனு அளிக்க வாய்ப்புள்ளபோதும் கடிதம் எழுதுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.