மலையாள நடிகை மீரா வாசுதேவன் தனது 3வது கணவரை பிரிந்துள்ளதாக அறிவித்துள்ளார். இவரை ‘அடங்க மறு’ படத்தில் ரவி மோகனுக்கு அண்ணி கதாப்பாத்திரத்தில் பார்த்திருப்போம். இவர் 2024ஆம் ஆண்டு மே மாதம், விபின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது அவருக்கு 3வது திருமணம் ஆகும். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தான் சிங்கிளாக இருக்கிறேன்" என கூறியிருக்கிறார்.