முதலமைச்சர் மீது எனக்கு ஒரே வருத்தம்தான் உள்ளது என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (ஜன., 06) செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அனைவரிடத்திலும் தாயுள்ளத்தோடு நடந்து கொள்ளும் முதலமைச்சர், அதிமுக மீதும் தாயுள்ளத்தோடு நடந்து கொள்கிறார் என தெரிவித்தார்.