பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக இயக்கப்படும் பிங்க் ரோந்து வாகனத்தின் ஓட்டுநர் ஏட்டு சக்திவேல் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சக்திவேலை உடனடியாக வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.