கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் உலோக உருக்கு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவி ரஞ்சன் (24) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்த 3 பேருக்கு தலா ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர்
விஜய் அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் லேசான காயமடைந்த 6 தொழிலாளர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.