பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, திமுகவுடன் கூட்டணியை இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டசபை தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை தேமுதிக கோரிய நிலையில், திமுக 7 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை வழங்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு தேமுதிக தரப்பில்தான் உள்ளது என்றும், வரும் 8ம் தேதி முடிவு தெரியவரும் என கூறப்படுகிறது.