"மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" - விஜய்

38பார்த்தது
"மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" - விஜய்
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிராக தவெக தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குச் சொந்தமான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி வேதனையளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளை மீட்டுத்தர வேண்டும். அதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாமதமின்றி எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி