நாடு முழுவதும் இன்று (டிச.5) ஒரே நாளில் 550 விமான சேவைகளை இண்டிகோ ரத்து செய்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், “ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு பதிலாக டிச.15 வரை கூடுதல் கட்டணம் எதுவுமின்றி பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். பயணிகள் ரத்து செய்த டிக்கெட்டுகளுக்கு முழு பணமும் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும்” என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.