போர் பதற்றம் காரணமாக ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட 11 நாடுகளுக்கு நாளை (மார்ச் 2) வரை விமானங்கள் இயக்கப்படாது என இந்திய விமான போக்குவரத்து ஆணையரகம் அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டிய அனைத்து விமான சேவைகளும் இன்று மதியம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், வெளிநாடு செல்லவிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.