பயன்படுத்திய க்ரீன் டீ பைகளை தூக்கி எறியாமல், அதிலுள்ள நீரை ஒரு டோனராக பயன்படுத்தினால் முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு வீக்கத்தை குறைப்பதுடன், சருமத்தை சுத்தப்படுத்தி பொலிவை தருகிறது. தினமும் படுக்கைக்கு செல்லும் முன் இதை பயன்படுத்துவது சருமத்தை சுருக்கங்களின்றி இறுக்கமாக வைத்திருக்க உதவும்.