எந்தச் சூழலிலும் தான் அதிமுகவிலேயே நீடிப்பேன் என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தனக்கு என்றும் இரட்டை இலை தான் என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தான் எல்லாம் என்றும் அவர் கூறியுள்ளார். தான் தவெகவில் இணையப் போவதாக வதந்திகள் பரப்பப்படுவதாகச் சாடிய அவர், தனது உயிர் போகும் நிலை வந்தாலும் அதிமுகவை விட்டு விலகப் போவதில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.