அதிமுகவிலிருந்து விலகிய மூத்த தலைவர் செம்மலை, விரைவில் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் கே.ஏ.எஸ் மூலமாக அவர் முதல்வர் விஜய் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கழகம் தற்போது தாயற்ற பிள்ளை போல் தவிப்பதாகவும், தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்துக் காலம்தான் தீர்மானிக்கும் என்றும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.