அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு சமூக காரணங்கள் இருப்பதாகவும், தற்போதைய தலைமை அனைவரையும் அனுசரித்து செல்லவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டி திருவள்ளூர் முன்னாள் எம்பி வேணுகோபால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்த இவரது இந்த முடிவு, கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.