தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளித்துவருகின்றனர். இந்நிலையில், அதிமுக ஆட்சி அமைந்ததும், கைத்தறி வீடுகள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம். சுகுமார் உறுதியளித்துள்ளார். வாலாஜாபேட்டையில் நடந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.