இலவச மடிக்கணினி திட்டத்தில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பரவும் தகவல் போலியானது என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. 'நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும், சொந்தமாக மடிக்கணினி வாங்க முடியாதவர்கள் விண்ணப்பிக்கலாம்' என குறிப்பிட்டு போலி தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதனை கிளிக் செய்து மக்கள் மோசடிகளில் சிக்காமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.