தேசிய கீதம் (ஜன கண மன), தேசியக் கொடி மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணையான சட்டப்பூர்வ அந்தஸ்தைத் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கும் வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஜூலை 20-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 'தேசிய கௌரவ பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026' அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இனி 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்படும்.