மறைந்த சிபிஐ கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ, சிபிஎம், திமுக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் முன்னிலையில் மறைந்த தலைவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நல்லகண்ணுவின் உடல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு கல்வி நோக்கத்திற்காக தானமாக வழங்கப்படுகிறது.