2026ஆம் நிதியாண்டுக்கான PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கவரேஜை விரிவுபடுத்த அரசாங்கம் முயல்கிறது. இந்த திட்டத்தை நிர்வகிக்கும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம், நாட்டின் இளைஞர்களின் திறன் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்காக, அரசு ரூ.10,831 கோடியை ஒதுக்கியுள்ளது. அடுத்த ஆண்டு 1.8 மில்லியன் பயிற்சியாளர்களுக்கு நிதியளிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.