திருவள்ளூர் அருகே அடிதடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சில நிமிடங்களிலேயே, அன்பரசு என்ற வாலிபரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புல்லரம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டபோது, அங்கு மறைந்திருந்த கும்பல் அவரை வழிமறித்து கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளது. பலத்த காயமடைந்த அன்பராசை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.