திமுகவின் Genz இளைஞர்களை தவெக அரசு ஒடுக்குவதாக
திமுக சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் அலீம் அல்புகாரி குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரியில் பேட்டியளித்த அவர், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை வைத்து வழக்குப்பதிவு செய்யக் கூடாது என ஆந்திர நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டியுள்ளோம். அதையும் மீறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். தவெக அரசு இளைஞர்களை ஒடுக்க வேண்டும், நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என கூறினார்.